Tuesday, April 14, 2009

சின்ன சிறு கிளியே......


கன்ன குழியினிலே கண்ணம்மா .........
என் மெய்பொருள் தெரியுதடி கண்ணம்மா ..

உன் தத்து நடையினிலே ,
இந்த உலகமே கொட்டி கிடக்குதடி.....

என்னென்று சொல்லுவேனடி ,
உன் இதழ் சிந்தும் புன்னகையை ...
மாதுளை முத்துக்கள் உதிரும் உன்னதம் சொல்லுவதோ,

இல்லை ,மயக்கும் மந்திரம் என்பதுவோ.....

பிரம்மன் ஆனந்த தாண்டவம் கொண்டானோ ,
உன் ஜனன தினத்தினிலே....
பூ கொல்லை கொணர்ந்து உன் பூ முகம் செய்தானோ ....
இல்லை மேகம் நிறம் கடன் பெற்று ,

உன் வர்ணம் கொடுத்தானோ ..


கண்ணே!

உன் கை குழைத்த சோற்றினிலே புது அமுதம் கிடைக்குதடி ,

உன்னை கையில் ஏந்துகையில் சுகந்த இன்பம் தோணுதடி


கண்மணியே !

இயற்கை தேவதையே உன்னைதான் சுற்றி வருகுதடி...

நீ என் வயிற்றில் பிறவாமையால் ,
உன் தாய்மேல்,

என் மனம் பொறாமை கொள்ளுதடி

இந்த ஜென்மம் பனித்ததடி ,

என் வாழ்வில் நீ வந்தமையால் .....
உந்தன் ஒரு முத்தம் போதுமடி ...

இனி என் வாழ் நாள் ஜனிக்குமடி கண்ணம்மா ,

என் வாழ்வும் இனிக்குமடி....


1 comment:

  1. //உன் கை குழைத்த சோற்றினிலே புது அமுதம் கிடைக்குதடி ,
    உன்னை கையில் ஏந்துகையில் சுகந்த இன்பம் தோணுதடி//

    புதுமையான உவமைக் கையாடல்..
    அழகு..!

    :)

    ReplyDelete